சென்னையில் பெண் ரவுடி, திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தான் சதீஷ். இவர், திமுக பிரமுகராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான லோகம்மாள் என்ற பெண்ணுக்கும் ,சதீஷ்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று (செப்டம்பர் 19) எப்போதும் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் ரவுடியான லோகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், திமுக பிரமுகரான சதீஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சதீஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், லோக்கம்மாளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக பிரமுகரை வெட்டி கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.