இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவை பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வெற்றிமாறன் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால்தான் தற்போதும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக விளங்கி வருகிறது என்றார். மேலும், ‘நம்மிடம் இருந்து நமது அடையாளங்கள் தொடர்ந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக அடையாள படுத்துகிறார்கள்’ என்று கூறினார்.
வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் பேரரசு இந்நிகழ்வு குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ராஜராஜ சோழன் இந்து இல்லையென்றால் வேறு என்ன? கிறித்துவரா இல்ல இஸ்லாமியரா?..உலகிலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்கிறது. உங்களுக்கு சாமி கும்மிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள். நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை’ என்றார்.
இயக்குநர் பேரரசின் இந்த பேச்சும் தற்போது பெரும் பேசுபொருளாய் மாறியுள்ளது.
இதையும் படிங்க: ‘தளபதி 67’ படத்திற்காக சென்னையில் தயாராகி வரும் பிரம்மாண்ட செட் – படப்பிடிப்பு விரைவில் துவங்கிறதா?