Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'தளபதி 67' படத்திற்காக சென்னையில் தயாராகி வரும் பிரம்மாண்ட செட் - படப்பிடிப்பு விரைவில் துவங்கிறதா?

    ‘தளபதி 67’ படத்திற்காக சென்னையில் தயாராகி வரும் பிரம்மாண்ட செட் – படப்பிடிப்பு விரைவில் துவங்கிறதா?

    ‘தளபதி 67’ திரைப்படத்திற்கான செட் ஓன்று சென்னையில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் விரைவில் ‘தளபதி 67’ படத்திற்காக இணையவுள்ளனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சறுக்கலை சந்தித்தது. அதேசமயம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வெற்றியை சந்தித்தது. 

    இதனிடையே,  ‘தளபதி 67’ திரைப்படத்திற்கான படப்படிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

    இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, ‘தளபதி 67’ திரைப்படத்திற்கான செட் ஓன்று சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், தளபதி 67’ திரைப்படத்தின் படப்படிப்பு விரைவில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது வரை  ‘தளபதி 67’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. 

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு விடுமுறைக்கு வெளியாக உள்ளது  குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: போராடிய இந்தியா…ஆறுதலடைந்த தென்னாப்பிரிக்கா; இறுதி போட்டியில் நடந்தது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....