Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'உயிரைக்கொடுத்தாவது பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன்' - மதுரை ஆதினம் பரபரப்பு பேச்சு!

    ‘உயிரைக்கொடுத்தாவது பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன்’ – மதுரை ஆதினம் பரபரப்பு பேச்சு!

    தருமபுர ஆதினத்தால் நடைபெறவிருக்கும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இதற்கு இந்து அமைப்பினர் மற்றும் பாமக  எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
    குற்றாலத்தில், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, உக்தவேதீஸ்வரர் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், வருகின்ற மே 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு யாகசாலை முதல்கால பூஜை நேற்று துவங்கியது.
    இதில் பங்கேற்க மதுரை ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயத்திற்கு வந்தார். அவருக்கு தருமபுர ஆதீனம் சார்பில், பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கட்டளை மடத்தில், தங்கியிருந்த தருமபுர ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்தார்.
    தொடர்ந்து யாகசாலை பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2 மடாதிபதிகளும் பங்கேற்றனர். அந்நேரத்தில், பூர்ணாகுதி நடந்த பின், மகா தீபாராதனை செய்யப்பட்டது. தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரதேசத்திற்கு, தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில்,  ஆதீன மடாதிபதிகளின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    ‌பழமை வாய்ந்த சைவ ஆதீனமாக விளங்கிய தருமபுர ஆதீனத்தின், ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இறைவனடி சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக, ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவி ஏற்றார். தருமபுர ஆதீனத்தில் அடித்தட்டு மக்கள், பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி காலங்காலமாக தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், வரும் மே மாதம் 22 ஆம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தருமபுர ஆதீனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதற்கு கோட்டாட்சியர் தடை விதித்தமைக்கு இந்து அமைப்பினரும், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு கோயில்கள் மற்றும் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
    மதுரை ஆதினம் பேச்சு:
    பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு விதித்த தடையை எதிர்த்து மதுரை ஆதீனம் பேசினார். அதில், பாரம்பரியம் மிகுந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தது கவலை அளிக்கிறது. நான் இப்படி பேசுவது தருமபுர ஆதீனமத்தால் தான். பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தமிழக முதல்வர் வந்து நடத்தி வைக்க வேண்டும். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று அவர் பேசினார்.
    தமிழக முதல்வர் செவி சாய்க்கவில்லை என்றால், அந்த சொக்கநாதரிடம் கோரிக்கை வைப்பேன். ஏறக்குறைய 500 ஆண்டு காலமாக பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் பட்டினப்பிரவேசம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதும் நடந்தது. தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போதும் பட்டினப்பிரவேசமும், பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன் என்று மதுரை ஆதினம் பேசினார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....