Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் தனுஷ் மீண்டும் எடுக்க உள்ள அவதாரம் - வெளிவந்த தகவல்..

    நடிகர் தனுஷ் மீண்டும் எடுக்க உள்ள அவதாரம் – வெளிவந்த தகவல்..

    விஷ்னு விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் தனுஷ் இந்திய திரையுலகின் முக்கியமான நடிகராக பார்க்கப்படுபவர்களில் ஒருவர். தமிழில் மட்டும் அல்லாது இந்தியிலும், ஆங்கிலத்திலும் தனுஷ் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் தனுஷ் பரவலாக அறியப்பட்டார். 

    தற்போது தனுஷ் நடிப்பில் ரெடியாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் அல்லாமல், சாணிக்காயிதம் மற்றும் ராக்கி போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

    இப்படம் ஒரு பான்- இந்தியா திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் தனுஷ் இயக்கவுள்ள திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும், இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகார்ப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

    முன்னதாக, தனுஷ் இயக்கிய பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த சோதனை; ரூ.70,000 செலவானது – பிரபல இயக்குநர் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....