குஜராத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பேருந்தில் சிலர் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நவ்சாரி தேசிய நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். அதேபோல் பேருந்தில் இருந்த 28 பேர் காயமடைந்தனர். இதில் 11 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பேருந்து ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் மீது நேரே மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜனவரி 15ஆம் தேதியுடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெற உள்ள நிலையில், இந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கலில் பட்டாசு விபத்து; 4 பேர் உடல் கருகி பலி