தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் பேருந்துகளிலும் ரயில்களும் சொந்த வாகனங்களிலும் படையெடுத்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில், சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் 3,300 அரசு பேருந்துகளில் 1.65 பேர் சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், தீபாவளி அன்றிரவே பொதுமக்கள் சென்னை திரும்ப நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்சிரமம் அடைவர். இதன்காரணமாக பெற்றோர்களும் மாணவர்களும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதனிடையே, தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் தீவிர பயிற்சி; வைரலாகும் புகைப்படங்கள்!