Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரே நாளில் 21 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று

    ஒரே நாளில் 21 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 21,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,38,25,185 ஆக அதிகரித்துள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,870 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,294 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,32,140 ஆக அதிகரித்துள்ளது. 

    மேலும் இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,48,881 ஆக உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,12,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 200.91 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....