Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    இந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் சிலர் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைமீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து பெற்றுள்ளனர். பிறகு, மீனவர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கரையூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, அர்ஜுனன், தங்கப்பாண்டி, தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மடகு பிச்சை, சிவகாமி நகரைச் சேர்ந்த ராஜா ஆகிய 6 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். 

    அவர்கள், மன்னார் கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை (ஜூலை 20) இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்ததனர். அங்கு, அப்போது வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, 6 பேரையும் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

    இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையின் தலை மன்னாருக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். இவர்கள் மீது விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மீனவப்பெருமக்கள் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....