தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தயிர், நெய் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்குகிறது ஆவின் நிர்வாகம். ஆவின் நிர்வாகம் இன்று அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், பாலுடன் தொடர்புடைய 29 பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
அதன்படி,
- 100 கிராம் தயிர் ரூபாய் 10-ல் இருந்து ரூபாய் 12-ஆக உயர்ந்துள்ளது.
- 200 கிராம் தயிர் ரூபாய் 25-ல் இருந்து ரூபாய் 28-ஆக உயர்ந்துள்ளது.
- பிரீமியம் தயிர் ஒரு லிட்டர் ரூபாய் 100-ல் இருந்து ரூபாய் 120-ஆக உயர்ந்துள்ளது.
- ஒரு லிட்டர் நெய் ரூபாய் 538-ல் இருந்து ரூபாய் 580-ஆக உயர்ந்துள்ளது.
- அரை லிட்டர் நெய் ரூபாய் 275-ல் இருந்து ரூபாய் 290-ஆக உயர்ந்துள்ளது.
- பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் ரூபாய் 30-ல் இருந்து ரூபாய் 35-ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது எனவும் இந்த வரி விலக்கு எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருந்தும் என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
The @GST_Council has exempt from GST, all items specified below in the list, when sold loose, and not pre-packed or pre-labeled.
They will not attract any GST.
The decision is of the @GST_Council and no one member. The process of decision making is given below in 14 tweets. pic.twitter.com/U21L0dW8oG
— Nirmala Sitharaman (@nsitharaman) July 19, 2022
இதன்படி அரிசி, பருப்பு, கோதுமை மாவு, கம்பு, ரவை, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றியை நோக்கி திரௌபதி முர்மு!