முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி திரைப்படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக தோனி விளையாடினாலும், விரைவில் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஒய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நோபல் பரிசு வென்றவரை குளத்தில் தூக்கிப்போட்ட ஊழியர்கள்! இப்படியும் ஒரு வாழ்த்தா?
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தனது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தில் யார் யார் நடிப்பார்? எப்படியான திரைப்படங்களை தோனி தயாரிப்பார் போன்ற கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழுந்து வருகிறது.