Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை கார் வெடிப்பு சம்பவம்; கைதான மூவருக்கு டிசம்பர் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற...

    கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைதான மூவருக்கு டிசம்பர் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இந்த மாதம் கைதான மூவருக்கும் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    கோவை கார் வெடிப்பு சம்பவம் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இவரின் திட்டங்கள் ஒவ்வொன்றாக தமிழக காவல்துறையும் புலனாய்வு குழுவும் கண்டறிந்து வருகின்றன. 

    இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபீன் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா வயது 25, முகமது அசாருதீன் வயது 23, முகமது ரியாஸ் வயது 27, பெரோஸ் இஸ்மாயில் வயது 27, முகமது நவாஸ் இஸ்மாயில் வயது 26, அப்சர்கான் வயது 28 ஆகிய 6 நபர்களை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் தொடர்புடைய உறவினர்கள் மற்றும் சந்தேகமாக இருக்கும் இடங்களிலும் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. 

    இதனிடையே இந்தச் சம்பவத்தில் கடந்த 8 ஆம் தேதி, கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் வயது 25, பெரோஸ்கான் வயது 28 மற்றும் நீலகிரி, குன்னூரைச் சேர்ந்த உமர் பாருக் வயது 39 ஆகிய 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் இன்று பூந்தமல்லியில் இருக்கும் தேசிய சிறப்பு புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

    இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    முதலைச்சர் ரங்கசாமி குறித்து ஸ்டாலின் பேசியது அரைவேக்காட்டுத்தனமான செயல்; அதிமுக அன்பழகன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....