தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதேபோல், ஒட்டுமொத்த நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பும் சற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல், சளி போன்று அறிகுறிகள் இருந்த நிலையில் ,தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, சோதனையின் முடிவுகள் நேற்று (செப்டம்பர் 9) வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதின் காரணமாக தற்போது அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.