ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால், அரசியல் கட்சிகள் அப்பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் திமுகவினர் பிரச்சாரத்தின்போது ஒரு குடுகுடுப்பைக் காரரையும் பிரச்சாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் தன் கையில் இருக்கும் குடுகுடுப்பையை ஆட்டியபடி, கை சின்னத்தில் நிற்கும் இளங்கோவனுக்கு வாக்களிக்குமாறு ஜக்கம்மா சொல்கிறார் எனவும் இல்லந்தோறும் கல்வி கொடுத்திருக்கிறது இந்த அரசி, இந்தத் தேர்தலில் இளங்கோவன் தான் வெற்றிப்பெறுவார் என ஜக்கம்மா சொல்கிறார் என்று பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரம் தொடர்பான காணொளியை ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருக்கும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பிரச்சாரகர் ஜக்கம்மா… என்ன ஒரு விந்தை. பெரியாரின் பேரன், ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் மிகவும் சுவாரஸ்யமான நேரம் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
DMK’s election campaigner for Erode by-election is Jakkamma. Irony of things!
And Periyar’s grandson has put his full faith in Jakkamma! Interesting times in TN. pic.twitter.com/zQX7qGB692
— K.Annamalai (@annamalai_k) February 9, 2023
இதனிடையே, வருகிற பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 14 ஆம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ திரும்பப் பெறுவதாக அறிவிப்பு