Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் கல்லூரி பேருந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் காயம்

    சென்னையில் கல்லூரி பேருந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் காயம்

    குன்றத்தூர் அருகே உள்ள சாலை தடுப்புச் சுவரில் பேருந்து மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். 

    சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுடன் கல்லூரி பேருந்து நந்தம்பாக்கத்தில் இருந்து நேற்று காலை கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. 

    அந்தக் கல்லூரி பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் அருகே இருக்கும் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பேருந்து சென்றுபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். மேலும், பேருந்தின் முன்புறம் பலத்த சேதம் அடைந்தது. 

    இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் அவசர ஊர்தியை அழைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பேருந்து விபத்தில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹேமா என்ற மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    இந்தியா vs இலங்கை; மூத்த வீரர்கள் கைகொடுப்பார்களா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....