சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள இராணி மேரிக் கல்லூரியில் நடைபெற்ற 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முதல்நிலை பெற்ற மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.
இராணி மேரிக் கல்லூரி பொன்விழாக் கலையரங்கில் 20-21 மற்றும் 21-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.3 மொழி துறைகள் ( பிரெஞ்சு, உருது, ஹிந்தி ) உட்பட 21 துறைகளில் இளநிலை(UG) பட்டம் முடித்த 2702 மாணவிகள் , 15 துறைகளில் முதுநிலை (PG) பட்டம் முடித்த 473 மாணவிகள், ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முடித்த 84 மாணவிகள் என மொத்தம் 3259 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் கல்விக்காக தி.மு.க அரசு தீட்டிய திட்டங்கள் என்ன? என்பது பற்றி விரிவாக பேசினார். அப்போது இராணி மேரி கல்லூரியில் மாணவிகள் தங்கி பயில விடுதி கட்டப்படும் என்றும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் சில வாக்குறுதிகளையும் அளித்து உரையாற்றினார்.
இராணி மேரிக் கல்லூரியை இடிக்க சொன்னவர் ஜெயலலிதா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு