கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இருப்பினும் அடுத்து புத்தாண்டு வர இருப்பதால் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயார் ஆகி வருகின்றனர். இதன் காரணமாக பல அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவுகள் நிரம்பி வருகின்றன.
இதனிடையே, கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் தேவையைப் பொறுத்து பிற வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்சப்பில் புதிய அம்சம்; மக்களே, இனி குழப்பம் வேண்டாம்..