Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்வாட்சப்பில் புதிய அம்சம்; மக்களே, இனி குழப்பம் வேண்டாம்..

    வாட்சப்பில் புதிய அம்சம்; மக்களே, இனி குழப்பம் வேண்டாம்..

    வாட்சப்பில் புதிய அம்சம் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    மேலும், வாட்சப் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    இந்த வகையில், வாட்சப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஒன்றுதான், அனுப்பிய செய்திகளை நீக்கும் வசதி. இதன்படி, நாம் ஒரு முறை செய்தியை அனுப்பிய பிறகு அதை  “delete for everyone” மற்றும் “delete for me” போன்ற விருப்பத் தெரிவுகள் அடிப்படையில் நீக்கலாம். 

    இந்த முறையில் அவசரமாக செய்தியை நீக்கும்போது பல சமயம் பயனர்கள் “delete for everyone” வசதியை தேர்வு செய்வதற்கு பதிலாக “delete for me” என்ற வசதியை தேர்வு செய்துவிடுகின்றனர். இது பல குழப்பங்களுக்கு சில நேரங்களில் வழிவகுக்கிறது. 

    இந்நிலையில், இந்த குழப்பத்தை களைய வாட்சப் நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, “delete for everyone” அல்லது “delete for me” போன்ற தெரிவுகளை க்ளிக் செய்தவுடன் அடுத்த 5 விநாடிக்கு “undo” தெரிவானது ஸ்கீரினில் காண்பிக்கப்படும். “undo” தெரிவை நாம் க்ளிக் செய்தால் நீக்கிய செய்திகள் மீண்டும் தோன்றிவிடும். இந்த வசதியானது தற்போது வாட்சப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    சென்னையில் நாளை ஐந்து ‘லோக்கல்’ ரயில்கள் ரத்து – வெளிவந்த ரிப்போர்ட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....