சீன அரசு கொரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராக, நீங்கா நினைவில் இடம் பிடித்து விட்டது கொரோனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டி எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற அவசர கால நடவடிக்கைகள் அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆகிப்போகின.
முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்கள் ஆகிப்போனது. அதனைத் தொடர்ந்து ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பலவிதமான ஊரடங்குகள் வந்து சென்றாகி விட்டது.
இந்தச் சூழலில்தான், கடந்த 2021-இன் பிற்பகுதியில் இருந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டன. கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவும் சமீபத்தில்தான் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இருப்பினும், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், கொரோனாவால் நேரும் உயிரிழப்புகளை பதிவு செய்யவில்லை என்றும், கொரோனா சார்ந்த விஷயங்களை சீன அரசு மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், சீனாவில் இயங்கி வரும் அமைப்பு ஒன்று, சீன அரசு தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கையை குறைவாகக் காட்ட, கொரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், அதற்கேற்ப சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளையும் சீன அரசு மாற்றியமைத்திருப்பதாகவும், சீனா தற்போது தெரிவிக்கும் எண்ணிக்கையை விடவும், கொரோனா பலி எண்ணிக்கை கடுமையாக அதிகமாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர் சரிவில் அதானி குழுமம்..அதிகளவில் பங்குகள் வீழ்ச்சி!