Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

    தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி – சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

    தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அக்டோபர் 2-ம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிகோரி தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் காவல் துறையிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. 

    இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையின் போது ஊர்வலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை கடைபிடிப்பது குறித்து உறுதியளித்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்….ரன்னிங் டைம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....