பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இந்தியா முன்னேறும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் பௌரி ஆகிய இடங்களில் சிறுமிகளுக்கு நடந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரத் ஜோடோ யாத்ராவில், பல திறமையான பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை சந்தித்து, அவர்களிடம் கருத்து கேட்டு வருகிறேன்.
ஒன்றும் மட்டும் தெளிவாகிறது; நாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் நம் இந்தியா முன்னேறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் பெண் வரவேற்பாளரைக் கொன்றதாக பாஜக மாநிலத் தலைவரின் மகனும் அவருக்கு சொந்தமான விடுதியில் 2 ஊழியர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் – பாமக தலைவர்