சென்னையில் விதி மீறிய 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டுவதாலும், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பானை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு, மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும் என்று கூறியிருந்தது.
இதன்படி ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 20 வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தற்போது சென்னையில் 2,403 கட்டிடங்களை சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும், 39 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.