சென்னையில் உள்ள ஜிம் பயிற்சியாளர் ஒருவர் ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் கடந்த சில மாதங்களாக உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வது அதிகரித்து வருகிறது. முறையான பயிற்சியும், ஆலோசனைகளும் இல்லாததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உரிய பயிற்சியாளர்களிடம் ஆலோசனைகளை கேட்டு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு விழிப்புணர்வுகளும் சமீபத்தில் உடற்பயிற்சி செய்வோர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜிம் பயிற்சியாளர் ஒருவர் ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஆகாஷ். 25 வயதாகும் இவர் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார்.
ஆகாஷ் உடற்பயிற்சி சார்ந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவருமாவார். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி செலுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதனின் வெளிப்பாடாக அவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். மேலும், அவரது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித் வசனம் பேசிய சிவகார்த்திகேயன்..