மாணவி ஒருவர் சக மாணவிகள் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து அதை ஆண் ஒருவருக்கு அனுப்பிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகரில் உள்ள முக்கியமான பல்கலைக் கழகம் சண்டிகர் பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் பல மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் தங்கி படிக்கும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சக மாணவிகள் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து அதை ஆண் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
நீண்ட நாள்களாக இந்த குற்றச்செயலில் இந்த மாணவி ஈடுபட்டு வந்துள்ள நிலையில், சுமார் 60 மாணவிகளின் வீடியோக்கள் அந்த ஆணுக்கு பகிரப்பட்டு, அது ஆபாச இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த காட்சிகள் வெளிவந்துள்ளன.
இந்த விவரம் மாணவிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், குற்றம் செய்த மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவி மீது இபிகோ 354சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக வெளியேவராமல் வீட்டுக்குள்ளேயே… இருட்டில் இருந்த குடும்பம்! பாசத்தால் நடந்த அவலம்