முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு, சீரம் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு இறுதியில் இப்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்தார். மேலும், மத்திய உயிரியல் தொழில் நுட்பத்துறையும், சீரம் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியின் ஆரம்ப விலை 200 ரூபாயிலிருந்து, அதிகபட்ச விலை 400 ரூபாய் மட்டுமே இருக்குமென சீரம் நிறுவன தலைமைச்செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கத் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்னைக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? – உலக தேங்காய் தின ஸ்பெஷல்