ஷாருக்கானின் பதான் திரைப்படத்திற்கு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அப்படத்தை மீண்டும் தணிக்கைக்குழு தணிக்கை செய்யவுள்ளது.
ஷாருக்கானின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து சில காலம் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகிவிட்டது.
இதைத்தொடர்ந்து, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க பதான் என்ற திரைப்படமானது உருவாகியுள்ளது. இத்திரைப்படமானது அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.
படம் வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் பதான் திரைப்படத்திலிருந்து வெளிவந்த ‘பேஷாரம் ராங்’ பாடல் இணையத்தில் பெரும் ஹிட் அடித்தது. இதோடு, அப்பாடலில் தீபிகா படுகோனே காவி உடையில் அதீத கிளாமரில் ஷாருக்கானுடன் நடனமாடியிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, பதான் திரைப்படத்தை புறக்கணிப்போம் என்ற வாதமும் ட்விட்டரில் எழுந்தன. மேலும், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த நடனக் காட்சிகள் இருப்பதாக கூறி பாஜக ஆளும் மாநிலங்களில் பதான் படத்தை திரையிட எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சர்ச்சையான காட்சிகளை நீக்குவதற்காக தணிக்கைக் குழு மீண்டும் படத்தை தணிக்கை செய்யவுள்ளது.
வெளிவரப்போகும் துணிவு டிரெய்லர்; குஷியில் அஜித் ரசிகர்கள்