உலகெங்கும் நிகழும் நிகழ்வுகளை நாம் பார்க்கும்போது, நமக்குள் பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். நடக்கின்ற நிகழ்வுகள் நம்மை அழ வைக்கலாம், உணர்ச்சிவசப்பட வைக்கலாம், வியக்க வைக்கலாம், சிரிக்க வைக்கலாம். அந்த வகையில், பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்று பலரையும் புன்னகைக்க வைத்துள்ளது.
அதென்ன நிகழ்வென்று உங்களுக்குள் கேள்வி எழும்புமாயின், வாருங்கள் அதைத் தெரிந்துக்கொள்ளலாம்.
பிரிட்டனில் ஒரு தம்பதி அயர்லாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் அடிக்கடி பக்கோடா வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். பக்கோடாவின் சுவையால் இந்த தம்பதிகள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
ஈர்ப்பென்றால் சாதாரணமான ஈர்ப்பில்லை. தங்களது குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் வைக்கும் அளவுக்கான ஈர்ப்பு இந்த தம்பதியிடத்தில் இருந்துள்ளது.
ஆம், எனவே, பக்கோடாவின் சுவையில் ஈர்க்கப்பட்ட இத்தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘பகோரா’ என பெயர் வைத்துள்ளனர். பக்கோடாவிற்கு அயர்லாந்தில் பகோரா என்று பெயர்.
இது குறித்து, அந்த தம்பதிகள் தெரிவிக்கையில், எங்களுக்கு பகோரா (பக்கோடா) என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால், எங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘பகோரா’ என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இத்தம்பதிக்கும், குழந்தைக்கும் அந்த உணவகம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.
தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘பக்கோடா’ என்று பெயர் வைத்துள்ள சம்பவம் பெரும் வியப்பையும், புன்னகையையும் மக்களுக்கு தந்துள்ளது.