கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீதுதான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
நேற்று இரவு, பைக்கில் வந்த மர்ம நபர்கள் தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு நேரவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் கட்சி அலுவலகம் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்தில் ‘பத்தாமல்’ போன ஒன்றைக் குறித்து வெளிவந்த புதிய அறிவிப்பு!