Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விக்ரம் படத்தில் 'பத்தாமல்' போன ஒன்றைக் குறித்து வெளிவந்த புதிய அறிவிப்பு!

    விக்ரம் படத்தில் ‘பத்தாமல்’ போன ஒன்றைக் குறித்து வெளிவந்த புதிய அறிவிப்பு!

    விக்ரம் திரைப்படத்தில்  முழுமையாக இல்லாமல் போன ஒன்று, இப்போது வெளியாக இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. ஆதலால், ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். 

    விக்ரம் திரைப்படத்தின் வெற்றி என்பது தமிழ்த் திரைப்பட உலகை தலை நிமிர வைத்துள்ளது. தொடர்ந்து தோல்வியான திரைப்படங்களால் துவண்டிருந்த ‘கோலிவுட் சினிமா’ தற்போதுதான் உற்சாகத்துடன் காணப்பட்டு வருகிறது. 

    உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்க, மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் தடம் பதித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான், ‘விக்ரம்’ .

    விக்ரம் திரைப்படத்தின் மீது மக்கள் வைத்திருந்த  எதிர்பார்ப்புகள் அத்தனையும் அப்படம் பூர்த்தி செய்துவிட்டது. விக்ரம் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு, திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் கழித்தும் துளியும் குறையாமல் உள்ளது. அதனின் வெளிப்பாடுதான் விக்ரம் படத்தின் வசூலில் வெளிப்படையாக தெரிகிறது. 

    இதுவரையில் நானூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள விக்ரம் திரைப்படமானது, வருகிற ஜூலை 8-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனையொட்டி வெளிவந்த திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியானது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

    இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தில் குறுகிய கால அளவிலேயே இடம்பெற்ற, பலரும் எதிர்பார்த்த ‘பத்தல பத்தல’ பாடலின் முழு காணொளியும் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விக்ரம் திரைப்பட ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். 

    அனிருத் இசையில் கமல்ஹாசன் வரிகளிலும், குரலிலும் வெளிவந்த ‘பத்தல பத்தல’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    ஆஸ்கருக்கு வாருங்கள்! நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....