Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபார்வையற்றவர்களும் பயன் பெறலாம்.. திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில்..!

    பார்வையற்றவர்களும் பயன் பெறலாம்.. திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில்..!

    செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள், பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

    செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு அவற்றை வைத்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

    இந்நிலையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள், பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குனர் இரா. சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் மொழிபெயர்ப்புகள், ஆய்வு நூல்கள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் செவ்விலக்கிய நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டங்களை செம்மொழி நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது.

    இதுதவிர, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டியல், தொல்லியல் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளுதல், செவ்வியல் நூல்களின் சிறப்புகளை யூ-டியூப் மூலம் பரப்புதல் போன்ற திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன. 

    இதைத் தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புதிட்டமும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இதில் 41 நூல்கள் செவ்வியல் நூல்கள் ஆகும். 

    இவை அனைத்தும் எளிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் வரும் டிசம்பரில் முடிவடையும். பின்னர், நூல்கள் அச்சிடப்பட்டு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: முகமது ஷமிக்கு கடைசி ஓவர் மட்டும் கொடுத்தமைக்கு காரணம் என்ன? – ரோஹித் சர்மா சொன்ன பதில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....