கர்நாடகாவில் பாஜக செயலாளர் நேற்றிரவு (ஜூலை 26) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னாடா மாவட்டத்தின் பாஜக செயலாளராக இருந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர், நேற்றிரவு (ஜூலை 26) தனது கடையை மூடிக்கொண்டிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் கோடாரி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில், பலத்த காயமடைந்த பிரவீன் நெட்டாரு-வை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பெல்லாரி காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரவீன் நெட்டாருவின் கொலை செய்யப்பட்டதுக்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ದಕ್ಷಿಣ ಕನ್ನಡ ಜಿಲ್ಲೆ ಸುಳ್ಯದ ನಮ್ಮ ಪಕ್ಷದ ಕಾರ್ಯಕರ್ತ ಪ್ರವೀಣ್ ನೆಟ್ಟಾರು ಅವರ ಬರ್ಬರ ಹತ್ಯೆ ಖಂಡನೀಯ. ಇಂಥ ಹೇಯಕೃತ್ಯ ಎಸಗಿರುವ ದುಷ್ಕರ್ಮಿಗಳನ್ನು ಶೀಘ್ರವಾಗಿ ಬಂಧಿಸಿ ಕಾನೂನಿನ ಅಡಿಯಲ್ಲಿ ಶಿಕ್ಷಿಸಲಾಗುವುದು.
ಪ್ರವೀಣ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಸಿಗಲಿ, ಈ ನೋವನ್ನು ಭರಿಸುವ ಶಕ್ತಿಯನ್ನು ದೇವರು ಅವರ ಕುಟುಂಬಕ್ಕೆ ಕರುಣಿಸಲಿ. ಓಂ ಶಾಂತಿಃ pic.twitter.com/kCk3W6hVc5— Basavaraj S Bommai (@BSBommai) July 26, 2022
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :
தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் நெட்டாரு காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரவீனின் ஆத்மா சாந்தியடையட்டும். இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கட்டும். ஓம் சாந்தி.
இவ்வாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
ஊழல் புகார்: போக்குவரத்து துணை ஆணையர் பணியிடை நீக்கம்