Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள்- காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

    பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள்- காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

    பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என்றும் மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

    தில்லியில் இன்று காலை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, அதானி விவகாரம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழுவின் முறையாக விசாரணை அல்லது இந்திய தலைமை நீதிபதியின் கண்காணிப்புக்கு கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தான் தங்களின் கோரிக்கை என கூறினார். 

    மேலும் ஏன் இதனை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது ஏன் பதற்றமாய் இருக்கிறார்கள் என்றும், நாங்கள் கேட்பதில் என்ன தவறு; அதை ஏன் செய்யக்கூடாது என்றும்  கேள்வி எழுப்பினார். 

    தொடர்ந்து பேசிய அவர், அவர்கள் விவாதத்திலிருந்து ஓடுவதாகவும் தாங்கள் அவ்வாறு இல்லை எனவும் தெரிவித்தார். ஒரு பிரச்சனையை எழுப்புவதற்கு முன்பே அவைகளை ஒத்தி வைப்பதாகவும், அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அனுப்பிய நோட்டீஸ் பற்றி எந்தவித குறிப்பும் இல்லை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

    நாங்கள் குழப்பத்தை உருவாக்குகிறோம் என்று பொய் சொல்கிறார்கள்; பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள். பொய் சொல்லி மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....