Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப்போகிறோம் - அண்ணாமலை பகிரங்கம்!

    திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப்போகிறோம் – அண்ணாமலை பகிரங்கம்!

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    கடந்த 8 ஆண்டு காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இனி கட்டப்படும் 16லட்சம் வீடுகள் நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படும். 17 கோடியே 96 லட்சம் ஆயுஷ்மான் பவன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரிசி, கோதுமை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கபட்டுள்ளது. 4 கோடி போலி எல்பிஜி கேஸ் இணைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    வெயில் மற்றும் காற்றின் சக்தியை பெறுவதில் உலகளவில் இந்தியா, 4வது இடத்தை பெற்றுள்ளது. இன்று முதல் வரும் ஜூன், 15ம் தேதி தேதி வரை பாஜக விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். எல்லாக் கட்சிகளும் அவர்களது கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. திமுக கட்சி நம்பர் ஒன் கட்சி என தெரிவிக்கலாம். ஆனால், எல்லாக் காரியத்திலும் பாஜக தான் மக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரூபே கார்டு மூலம் 70 கோடி பேர் இணைந்து உள்ளார்கள். 2014 க்குப் பின் தமிழகத்தில் 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 22,500 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை எட்டு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது. மரபுசாரா எரிசக்தி துறை, 300 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

    திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4ஆம் தேதி வெளியிட உள்ளோம். ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது.

    அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை; புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் முழுவதும் படிக்கவில்லை என்றார்.

    பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மேகதாது வேண்டும் என கர்நாடக சிவகுமார் ஊர்வலம் செல்கிறார், கேரளவில் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு குறித்து திமுக ஸ்டாலின் பேசவில்லை. முல்லைப் பெரியாறு, மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கபட நாடகம் ஆடுகிறது என்று கூறியுள்ளார்.

    சென்னைக்கு மாற்றலாகிறார் ஆர்யன் கான் வழக்கின் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....