கோவையில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண்ணை பணம் கேட்டி மிரட்டிய கும்பல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவையில் உள்ள பீளமேடு பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் அப்பகுதியிலேயே பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், எப்போதும் போல நேற்று முன்தினம் தனது பார்லரில் அப்பெண் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4 பேர் அங்கு வந்தனர். வந்தவர்கள், அந்த பெண்ணிடம் பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து, பணம் தரவில்லையென்றால் உன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து அந்த நான்கு பேரும் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து பீளமேடு போலீஸில் நேற்று புகார் அளித்தார்.
இதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், பியூட்டி பார்லர் பெண்ணிடம் மிரட்டல் விடுத்தது ரீச்சல், செலீனா, ராஜகுமாரி மற்றும் ஒரு ஆண் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பும்ராவுக்கு அணியில் இடம் உண்டா? இல்லையா? – குழப்பத்தில் ரசிகர்கள்!