முன்னும் பின்னும் என இரு இளம் பெண்களை உட்காரவைத்துக் கொண்டு இளைஞர் செய்த பைக் சாகச காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் இளைஞர் ஒருவர் முன்னும் பின்னும் இரு பெண்களை அமர வைத்துக்கொண்டு பைக் சாகசம் செய்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இந்தக் காணொளி வைரல் ஆனதை அடுத்து மும்பை போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து, பைக்கில் இரு பெண்களை வைத்துக் கொண்டு சாகசம் செய்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் மூன்று பேர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவுகள் 279 மற்றும் 336 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
dangerous Stunt with 2 pillion rider one in front & one at rear,
no helmet & doing whilly !they know that Mumbai roads hv became #PotholesFree now…!
pls catch him @MTPHereToHelp
bike reg no. is Mh01DH5987 pic.twitter.com/tvYeRMDR39
— @PotholeWarriors Foundation💙 #RoadSafety🇮🇳🛵🛣 (@PotholeWarriors) March 30, 2023
இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிகேசி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்தக் காணொளியில் உள்ள நபர்கள் குறித்து தகவல் ஏதும் தெரிந்தால் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
பும்ராவுக்கு அணியில் இடம் உண்டா? இல்லையா? – குழப்பத்தில் ரசிகர்கள்!