மத்திய பிரதேசத்தில், ஒப்பனை செய்து மணப்பெண்ணின் அழகை கெடுத்துவிட்டதாக ஒப்பனைக் கலைஞர் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வித்தியாசமான மற்றும் மிகவும் விசித்திரமான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு மேக்கப் போட வந்த மணப்பெண் அழகை பியூட்டிஷன் கெடுத்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ராதிகா சென் என்ற மணப்பெண் தனது ஒப்பனைக்காக அழகு நிலையம் வைத்திருக்கும் மோனிகா பதக் என்பவரை அழைத்துள்ளார். திருமணம் நடந்த அன்று மணப்பெண்ணின் குடும்பத்தினர் அழகு நிலைய கலைஞரான மோனிகா பதக்கை அழைத்துள்ளனர்.
இருப்பினும் அவர், பல அழைப்புகளை எடுக்கவில்லை, பிறகு தான் அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றிருப்பதாக வர தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பதிலாக தனது அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை மேக் அப் போட கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணோ, மணப்பெண்ணுக்கு மேக் அப் போட்டு மணப்பெண்ணின் அழகை கெடுத்துள்ளார்.
இதுகுறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் மோனிகா பதக்கை தொடர்புகொண்ட போது, அவர் கடுமையாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், மேக் அப் போட்ட பெண் நிபுணர், மணப்பெண்ணுக்கு மோசமாக மேக் அப் போட்டதாகவும், மேலும் அநாகரீகமாக பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது; முதலமைச்சர் ரங்கசாமி