பிசிசிஐ அணி வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் ரவீந்திர ஜடேஜா கிரேட் ‘ஏ+’ என்ற உயர் நிலைக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளன. கிரேட் ‘ஏ+’ நிலைக்கு ரவீந்திர ஜடேஜா உயர்ந்துள்ளார்.
அதேநேரம், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா கிரேட் ஏ-வில் இணைந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் முறையே ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடில் இருந்தவர்கள். சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் கிரேட் ‘சி’-யிலிருந்து ‘பி’ கிரேடுக்கு முன்னேறியுள்ளனர்.
மேலும், கே.எல்.ராகுல், ஏ கிரேடிலிருந்து ‘பி’ கிரேடுக்கு இறக்கப்பட, ஷர்துல் தாக்கூர் ‘பி’ கிரேடில் இருந்து ‘சி’-கிரேடுக்கு இறக்கப்பட்டுள்ளார்.
கிரேட் ‘சி’ படிநிலையில் புதிய வீரர்களாக குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
கிரேட் ஏ+ படிநிலையில் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ.7 கோடி என்றும், கிரேட் ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 5 கோடி என்றும், கிரேட் பி படிநிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3 கோடி என்றும், கிரேட் சி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ.1 கோடி என்றும் ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
36 கட்களுக்குப் பிறகு மூச்சு விட்ட தசரா; ரிலீஸுக்கு தயார்..