மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணம் ஜூலை 17-ம் தேதி முடிவடைகிறது.
இதன்பிறகு, இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இச்சுற்றுப்பயணத்தில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள், 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்:
ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், மற்றும் அர்ஷ்தீப் சிங்.
வரம்பு மீறியதா இந்திய அரசு?- வழக்கு தொடர்ந்த ட்விட்டர்