Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபளார் அறையால் பழி தீர்த்த மாணவி; மோதலால் உண்டான களேபரம்!

    பளார் அறையால் பழி தீர்த்த மாணவி; மோதலால் உண்டான களேபரம்!

    பெங்களூருவில் கல்லூரி மாணவிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் தயானந்த சாகர் என்ற பொறியியல் கல்லூரி இருக்கிறது. 

    இந்தக் கல்லூரியின் உணவகத்தில் சக மாணவ மாணவிகள் சூழந்திருக்க, இரு மாணவிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு மாணவி பேசிகொண்டிருக்கும்போது, திடீரென மற்றொரு மாணவியின் கன்னத்தில் அடித்து விட்டார். 

    இதனால், ஆத்திரமடைந்த அடி வாங்கிய அந்த மாணவி பதிலுக்கு பல முறை அந்த மாணவியை அடித்தார். 

    இதையும் படிங்க:‘ட்ரோனி’ ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்து வைத்த ‘தோனி’ தல! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

    இந்தச் சம்பவம் நடந்தபோது, அவர்களுடன் இருந்த மாணவிகள் அதனை தடுக்க முன்வராமல், அந்தச் சண்டையைத் தூண்டி விடும் வகையில், ஒன்றாக கோஷம் போட்டனர். எனினும், இந்த மோதலுக்கான காரணம் என்னவென்று தகவல்கள் தெரியவில்லை. 

    சமீபத்தில் உத்தர பிரதேசத்தில், 2 ஆசிரியைகள் மோதி கொண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெங்களூருவில் மாணவிகள் மோதிக் கொண்ட இந்த காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....