Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்துக்குவிப்பு வழக்கில் ஆ.ராசாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!

    சொத்துக்குவிப்பு வழக்கில் ஆ.ராசாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 16 நபர்கள் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. குறிப்பாக, தில்லியில் 20 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் போன்ற முக்கிய இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் உல்லாசத்திற்கு அழைத்தார்! ஸ்வப்னா சுயசரிதையால் கேரள அரசியலில் பரபரப்பு

    இதனிடையே, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை தொடங்குவதற்கு அடிப்படையாக அமைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 

    இந்நிலையில், இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து சிபிஐ இறுதி விசாரணை அறிக்கையில், 5.53 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....