Friday, March 22, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அவதார் திரைப்படத்தின் அடுத்த கட்டம் என்ன? - ஜேம்ஸ் கேமரூன் சொன்ன அதிர்ச்சி பதில்..

    அவதார் திரைப்படத்தின் அடுத்த கட்டம் என்ன? – ஜேம்ஸ் கேமரூன் சொன்ன அதிர்ச்சி பதில்..

    அவதார் 2-ம் பாகத்தின் வசூலைப் பொருத்துதான் அடுத்த பாகத்தை தயாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

    அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். 

    கடந்த 2009-ம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் திரைப்படம் பல மாயங்களை நிகழ்த்தியது. கூடவே வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. 

    அவதார் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தபோதே, இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை பெரிய வியப்பாகவே ரசிகர்களிடத்தில் இருந்தது. இதையடுத்து, அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதையடுத்து, அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். 

    அதன் தயாரிப்பு பணிகள் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இறுதியில் அவதார் 2-ம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், தற்போதைய தகவலின்படி, இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ள அவதார் 2-ம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அவதார் 2 படத்தின் வசூலைப் பொருத்துதான் அடுத்த பாகத்தை தயாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், 3 ஆம் பாகத்தோடு அவதார் வரிசை முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவருக்கு இந்து கோவிலில் அரசு வேலையா? திருமணத்தால் எழுந்த புதிய சர்ச்சை..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....