Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ்! கைது நடவடிக்கை எடுத்த காவல்துறை

    வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ்! கைது நடவடிக்கை எடுத்த காவல்துறை

    வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தடையை மீறி ஆங்காங்கே பைக் மற்றும் ஆட்டோ பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பந்தயங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்நிலையில், சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடைபெற்றது. இந்தத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் மடக்கி பிடித்து, 4 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். அதே சமயம், தலைமறைவான சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

    கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    500 ரூபாய் நோட்டுகளை வீசிய காங்கிரஸ் தலைவர்; வைரல் காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....