Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்500 ரூபாய் நோட்டுகளை வீசிய காங்கிரஸ் தலைவர்; வைரல் காணொளி

    500 ரூபாய் நோட்டுகளை வீசிய காங்கிரஸ் தலைவர்; வைரல் காணொளி

    கர்நாடகாவில் காங்கிரஸ் பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 500 ரூபாய் நோட்டுகளை வீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    கர்நாடக சட்டமன்றத்திற்கு மே மாதம் 10 அம தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    இந்த நிலையில், அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரை செய்து வருகின்றன. இந்தத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு மாத காலத்தில் அவ்வப்போது கர்நாடகா வந்து பல நல திட்டங்களை திறந்து வைத்து வருகிறார். அதே சமயம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதனிடையே, காங்கிரஸ் கட்சி சார்பிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேரு மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வாகன பரப்புரையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

    அப்போது அவர், பொதுமக்கள் மத்தியில் 500 ரூபாய் நோட்டுகளை வீசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வெளியானது, பொன்னியின் செல்வன்-2 படத்தின் டிரைலர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....