Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி முன்தினம் ஊருக்கு செல்பவர்களின் கவனத்திற்கு!

    தீபாவளி முன்தினம் ஊருக்கு செல்பவர்களின் கவனத்திற்கு!

    தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் புறப்பட்டு செல்லும் பயணிகளுக்கான பேருந்து முன்பதிவை இன்று முதல் தொடங்கலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால், கடைசி நேரத்தில் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் முன் கூட்டியே தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். 

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இதனால், பொதுமக்கள் பேருந்துகளில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் திட்டமிடுவார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய நாட்கள் சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகள் விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை பயணிப்பவர்களுக்கு முன்பதிவு நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) தொடங்கியது.

    இந்நிலையில், தீபாவளிக்கு முன்தினம் புறப்பட்டு செல்லும் பயணிகளுக்கான பேருந்து முன்பதிவை இன்று முதல் தொடங்கலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் பயணிகள், www.tnstc.in என்ற இணையதளத்தின் மூலமும் TNSTC என்ற செயலி மூலமும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: காணத்தவறாதீர்கள்.. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் அதிசய நிகழ்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....