நடிகர் அசோக் செல்வன் மற்றும் விமர்சகர் ப்ளு சட்டை மாறனின் சர்ச்சைக்குரிய வகையிலான ட்விட்டுகள் சமூகவலைதளத்தில் மிக வேகமாய் வைரலாகி வருகின்றன.
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இவற்றுள் ஹாஸ்டல் மற்றும் வேழம் திரைப்படம் தோல்விப்படங்களாகும்.
அதேசமயம், மற்ற மூன்று படங்களும் விமர்சன ரீதியாக வரவேற்க பட்டாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பகுதியில் இந்த வருடம் அதிக தோல்விப் படங்களை தந்த நடிகர் என அசோக் செல்வனை குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, நடிகர் அசோக்செல்வன் ‘குரைக்கிற நாய்களை ஓரங்கட்டிவிட்டு முன்னேறிக்கொண்டே இருங்கள்’ என பதிவிட்டார். இவரின் இந்த ட்விட் வைரலானது.
இதன்பின்னர், ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்வீட்ஸ் வழியே குரைப்பது எதற்கும் உதவாது குழந்தை. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணடிக்க வேண்டாம். ஒரு வருடத்தில் ஐந்து தோல்வி படங்கள் கொடுப்பது பெரிய சாதனைதான். வருங்காலத்தில் எந்தவொரு ஹீரோவும் இந்த சாதனையை முறியடிக்க முடியாது. உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். எண்ணிக்கையை விட தரம் முக்கியம்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அசோக் செல்வன் மற்றும் விமர்சகர் ப்ளு சட்டை மாறனின் ட்விட்டுகள் சமூகவலைதளத்தில் மிக வேகமாய் வைரலாகி வருகின்றன.
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு..