ஆயுத பூஜை விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கோயம்பேடு உள்ளிட்ட 3 முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், சென்னையிலிருந்து தினந்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், சென்னையைத் தவிர்த்து பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் பாருங்க : மக்களே ரெடியா? தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியது..