Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரைப்படங்களில் பிஸியாக இருக்கையில், டாக் ஷோ  நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் அனிருத்!

    திரைப்படங்களில் பிஸியாக இருக்கையில், டாக் ஷோ  நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் அனிருத்!

    தமிழ்த் திரைப்படங்களில் இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் தான் அனிருத். இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் மெகா ஹிட் தான். தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் அனிருத் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
    முதல் படத்திலேயே, “வை திஸ் கொலவெறி” பாடல், உலக அளவில் ஹிட் ஆனது. அதன் பிறகு, அடுத்தடுத்தப் படங்களில் அனிருத் தனது இசையால் வெற்றிநடை போட்டு வருகிறார். சமீபத்தில், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு, தொகுப்பாளராக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தென்னிந்திய சினிமாவின் ராக் ஸ்டார் ஆக இருக்கும் அனிருத், கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
    பீஸ்ட் படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திலும் அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். கமலின் விக்ரம் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். இது தவிர, சில தெலுங்குப் படங்களிலும் அனிருத் கமிட் ஆகியுள்ளார்.
    இப்படி, எப்போதும், நேரமில்லாமல் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தொலைக்காட்சியில் புதிய டாக் ஷோவிற்கு தொகுப்பாளராக இணைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த டாக் ஷோவில், திரைத்துறையைச் சார்ந்த பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இந்நிகழ்ச்சிக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....