Friday, March 15, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்முதலையிடம் இருந்து மானை காப்பாற்றும் யானை! வைரல் காணொளி

    முதலையிடம் இருந்து மானை காப்பாற்றும் யானை! வைரல் காணொளி

    தண்ணீர் குடிக்க சென்ற மானை, முதலை வேட்டையாடும் சமயத்தில் யானை காப்பாற்றும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

    நம்மால் முடிந்தால் எந்த உதவியையும் செய்யலாம். முடிந்தால் உயிரையும் கொடுக்கலாம் என்று சொல்வதை கேட்டிருப்போம். அப்படியான ஒரு சம்பவம் விலங்குகளிடம் இருப்பதை ஒரு காணொளி வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

    சமீப காலமாகவே யானைகள் குறும்பும் அன்பும் கலந்த காணொளிகள் இணையத்தில் சுற்றி வருகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு யானையின் காணொளியில், முதலை ஒன்று தண்ணீருக்குள் உணவுக்காக பதுங்கி காத்திருக்கிறது. அப்போது அங்கு தண்ணீர் குடிக்க வந்த மான் குட்டியை முதலை வேட்டையாட முயல்கிறது. அந்த சமயத்தில், அங்கு கூட்டமாக சுற்றிய யானைகளில் ஒன்று, இதைப்பார்த்து கோபம் கொண்டு முதலையை தன் கால்களால் நசுக்கி, மானை காப்பாற்றுகிறது. அதன் பிறகு, மான் குட்டி பாதுகாப்பாக திரும்பி சென்று ஓடி விடுகிறது.

    பார்க்கவே வியப்பாக இருக்கும் இந்தக் காணொளி விலங்குகளுக்கும் உதவும் மனமுண்டு என காட்டுகிறது. 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓபிஎஸ் அணி தரப்பு வேட்பாளர் அறிவிப்பு 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....