அம்பேத்கரை காவி சாயம் பூசி அவமதித்த இந்து மக்கள் கட்சியினரை கண்டித்து புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர், தந்தை பெரியாரை தொடர்ந்து அம்பேத்கரை அவமதித்த இந்துமக்கள் கட்சியை கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை அருகே புதுச்சேரி மாநில விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் தலைமை தாங்கினார்.
இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சினர் பங்கேற்று இந்து மக்கள் கட்சி மற்றும் அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அம்பேத்கருக்கு மதசாயத்தை பூசிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் மீது தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் மீது புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சி செய்வேன்! உதயநிதி ஸ்டாலின்