அமேசான் நிறுவனத்தில் இருந்து 20-ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிகழ்வானது கடந்த இரு மாதங்களில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ட்விட்டர் 2.ஓ திட்டத்தை முன்னிட்டு அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் 4000-க்கும் அதிகமான ட்விட்டர் ஊழியர்களை நீக்கியதாக தகவல்கள் வந்தன.
ட்விட்டரைத் தொடர்ந்து, மெட்டாவின் வருவாய் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்துள்ளதால், மெட்டாவின் பணியாளர்கள் எண்ணிக்கையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000- க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும், 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த பணிநீக்கமானது, விநியோக மைய நிர்வாகிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் போன்றவர்களிடத்தில் செயல்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், அமேசானில் 20-ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அமேசானில் 1.6 மில்லியன் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க ரூ.1620 கோடி ஒதுக்கீடு; மெட்ரோ ரயில் நிர்வாகம்